நடப்பாண்டில் ஏப்.1 முதல் நேற்று வரை 8,62,544 விவசாயிகளுக்கு ரூ.7,666 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் பெரியகருப்பன்

6 months ago 19

சென்னை: நடப்பாண்டில் ஏப்.1 முதல் நேற்று வரை 8,62,544 விவசாயிகளுக்கு ரூ.7,666 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். “கடந்த ஆண்டைவிட ரூ.450 கோடி கூடுதலாக பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக. ஏப்.1 முதல் நேற்று வரை 77,797 மெ. டன் யூரியா, 41,119 மெ. டன் டிஏபி, 18,490 மெ.டன் எம்ஓபி உரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 70,116 மெட்ரிக் டன் காம்ப்ளெக்ஸ் உரங்களும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது” என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

The post நடப்பாண்டில் ஏப்.1 முதல் நேற்று வரை 8,62,544 விவசாயிகளுக்கு ரூ.7,666 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் பெரியகருப்பன் appeared first on Dinakaran.

Read Entire Article