தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தலைமையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் ..!!

6 months ago 14

சென்னை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தலைமையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், இன்று (08.11.2024) சென்னை, தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில், தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு கட்டுமான நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் வீடு கட்டிக் கொள்வதற்கு அல்லது தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளை சொந்தமாக ஒதுக்கீடு பெறுவதற்கு ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்த வீட்டுவசதி திட்டம் கட்டுமானத் தொழிலாளர்கள் பயனடையும் வகையில், அதிகளவில் பயனாளிகளை மாவட்டம் தோறும் சேர்க்க, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் முதன்மை செயலாளர் / தொழிலாளர் ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த். இ.ஆ.ப., தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் கொ.வீர ராகவராவ் இ.ஆ.ப., தமிழ்நாடு கட்டுமான வாரிய செயலாளர் க.ஜெயபால் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தலைமையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் ..!! appeared first on Dinakaran.

Read Entire Article