தொடர் மழையால் போடிமெட்டு வனச்சாலையில் திசைமாறிச் செல்லும் நீரோட்டங்கள் - சாலைகள் சேதம்

2 months ago 11

போடி: போடிமெட்டு வனப்பகுதியில் தொடர் மழை காரணமாக, நீரோட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து திசை மாறி சாலைகளில் செல்கின்றன. இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்து வருகிறது.

தமிழகத்தையும் கேரளத்தையும் இணைக்கும் முக்கிய சாலையாக போடிமெட்டு மலைச்சாலை உள்ளது. போடி அருகே முந்தலில் இருந்து 20 கி.மீ. வனப்பாதையில் இச்சாலை அமைந்துள்ளது. வாகனங்கள் சிரமமின்றி மலை உச்சிக்குச் செல்ல 17 கொண்டை ஊசி வளைவுகளுடனான பாதை உள்ளது. மேலும், வனத்தில் பெய்யும் மழைநீர் சாலையோரமாகவே மலையடிவாரத்துக்குச் செல்ல உரிய நீரோட்ட வசதியும் செய்யப்பட்டுள்ளது.

Read Entire Article