தொடர் மழை; சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!

2 months ago 10

சென்னை: தொடர் மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். சென்னையில் இன்று வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என தெரிவித்திருந்த நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதை அடுத்து நேற்று முதல் சென்னையில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சென்னையில் இன்று (NOV.12) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் இன்று வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என முதலில் தெரிவித்திருந்த நிலையில் பின்னர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, 2 மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என ஆட்சியர் பிரபுசங்கர் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என ஆட்சியர் அருண்ராஜ் அறிவித்துள்ளார்.

The post தொடர் மழை; சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article