தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் 22ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது: திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் பேட்டி

4 hours ago 3

சென்னை: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் 22ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது என அண்ணா அறிவாலயத்தில் திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் அறிவித்துள்ளார். 7 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் தலைவர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்து கடிதம் எழுதி இருந்தார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவர் கே.டி.ராமராவ் பங்கேற்கின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பை ஏற்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூட்டத்தில் பங்கேற்கிறார். மேற்குவங்க மாநிலத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ், ஒடிசாவில் இருந்து பிஜு ஜனதா தளம் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர் என தெரிவித்தார்.

 

The post தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் 22ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது: திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article