டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக 22ம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங்கை சந்தித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அழைப்பு விடுத்தார். திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி, கனிமொழி சோமு மற்றும் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.
The post தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு நேரில் அழைப்பு appeared first on Dinakaran.