தைவானில் மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகக் காற்றுடன் கரையைக் கடந்த கராத்தான் சூறாவளி

4 months ago 31
தைவானை அச்சுறுத்தி வந்த கராத்தான் சூறாவளி, மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகக் காற்றுடன் கரையைக் கடந்தது. சூறாவளிக்கு 2 பேர் உயிரிழந்த நிலையில் கனமழை பெய்து வருவதால் அந்நாட்டின் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழை மற்றும் பலத்த காற்றால் நூற்றுக்கும் மேற்பட்ட விமான மற்றும் ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழை தொடரும் என்பதால் மக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Read Entire Article