தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு: அடுத்தது என்ன?

1 day ago 5

விழுப்புரம்: பாமகவில் கடந்த சில நாட்களாகவே அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவிவருகிறது. அதிகார மோதல், தந்தை - மகன் உறவில் விரிசல் என்ற இந்த மோதல் போக்கு பாமக மூத்த நிர்வாகிகள் தொட்டு கடைநிலை தொண்டர்கள் வரை அனைவர் மத்தியிலும் ஆதங்கத்தை, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் நிலையில் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே சமாதானம் ஏற்பட வேண்டும் என்று அக்கட்சியினர் தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று (ஜூன் 5) காலை அன்புமணி ராமதாஸ், தைலாபுரம் இல்லத்தில் தந்தை ராமதாஸை சந்தித்தார். இது சமரசப் பேச்சுவார்த்தை என்றும் கூறப்படுகிறது. ஆனால் சுமார் 45 நிமிடங்கள் நடந்த அந்த சந்திப்புக்குப் பின்னர் அன்புமணி காரில் புறப்பட்டுச் சென்றார். அவர் செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சந்திப்பை முடித்ததுமே அன்புமணி காரில் புறப்பட்டுச் சென்று விட்டார்.

Read Entire Article