தேர்தல் படிவங்களில் நான்தான் கையொப்பமிடுவேன்: பாமக செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ் திட்டவட்டம்

4 hours ago 1

விழுப்புரம்: ​பாமக சார்​பில் தேர்​தல் படிவங்​களில் இனி நான்​தான் கையொப்​பமிடு​வேன் என கட்சி நிறு​வனர் ராம​தாஸ் கூறினார். கட்​சி​யின் மாநில செயற்​குழுக்கூட்​டம் விழுப்​புரம் மாவட்​டம் திண்​டிவனம் அடுத்த ஓமந்​தூரில் நேற்று நடை​பெற்​றது. ராம​தாஸ் தலை​மை​யில் நடை​பெற்ற இந்​தக் கூட்​டத்​தில், கவுர​வத்தலை​வர் ஜி.கே.மணி, பேராசிரியர் தீரன், மாநிலப் பொதுச் செய​லா​ளர் முரளி சங்​கர், பாட்​டாளி தொழிற்​சங்​கப் பேரவை பொதுச் செய​லா​ளர் முத்​துகு​மார் உள்​ளிட்​டோர் கலந்து கொண்டனர். இந்​தக் கூட்​டத்தை அன்​புமணி ஆதர​வாளர்​கள் புறக்​கணித்​தனர்.

கூட்​டத்​தில் நிறு​வனர் ராம​தாஸ் பேசும்​போது, “2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கூட்​டணி அமைத்​துப் போட்​டி​யிட முடிவு செய்துள்ளோம். கூட்​டணி தொடர்​பான அதி​காரம் எனக்​குத் தரப்​பட்​டுள்​ளது. வேட்​பாளர்​களை தேர்வு செய்​யும் பணியை விரைவில் தொடங்க உள்​ளோம். சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வழங்​கப்​படும் ‘ஏ’, ‘பி’ படிவங்​களில் நான்​தான் கையொப்​பமிடு​வேன்.

Read Entire Article