புதுடெல்லி: அரியானா, சிர்சாவில் தேரா சச்சா சவுதா என்ற ஆசிரமம் நடத்தி வந்தவர் குர்மீத் ராம் ரகீம் சிங். ஆசிரம பெண்கள் 2 பேரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அவருக்கு ராம் ரகீமுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ரோதக்கில் உள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்ட அவர் பஞ்சாப், அரியானா, டெல்லி சட்ட பேரவை தேர்தல்கள் நடக்கும் சமயத்தில் பரோலில் வெளியே வந்துள்ளார். தற்போது, நீதிமன்றம் அவருக்கு 21 நாள் பரோல் வழங்கியுள்ளது.இதையடுத்து சிறையில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த அவர் சிர்சாவில் உள்ள ஆசிரமத்துக்கு சென்றார்.
The post தேரா சச்சா தலைவர் ராம் ரகீமுக்கு 21 நாள் பரோல் appeared first on Dinakaran.