தேனி சுருளிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பறிப்பு

6 months ago 23

 

தேனி: தேனி மாவட்டம் சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி வெங்கடேசனை பொறுப்பில் இருந்து நீக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார். நிதியிழப்பு ஏற்படுத்திய புகாரில் நடத்தப்பட்ட கணக்கு தணிக்கையில், ரூ.4.67 லட்சம் உரிய அனுமதியின்றி செலவிடப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த தொகையை நாகமணி, செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தொகையை அவர் செலுத்தாததால் செக் அதிகாரமும் பறிக்கப்பட்ட நிலையில், அவரது பதவிக்காலம் இன்னும் 2 மாதங்களில் முடிவடைய இருக்கும் நிலையில் பதவி பறிக்கப்பட்டது.

The post தேனி சுருளிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பறிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article