தேசிய மகளிர் ஆணைய விசாரணை நிறைவு: மத்திய அரசிடம் விரைவில் அறிக்கை தாக்கல்

4 months ago 14

பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான விசாரணையை முடித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் நேற்று டெல்லி புறப்பட்டனர். விசாரணை அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதன்தொடர்ச்சியாக ஆணைய உறுப்பினர்கள் மம்தா குமாரி, பிரவீன் தீட்ஷித் ஆகியோர் நேற்று முன்தினம் அண்ணா பல்கலைக்கழகத்தில் விசாரணையை தொடங்கினர். பதிவாளர் ஜெ.பிரகாஷ் மற்றும் டீன்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்களுடன் ஆய்வு நடத்தினர். இதைத்தொடர்ந்து, மாலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆலோசனை செய்தனர். அதன்பிறகு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆகியோரை சந்தித்தனர்.

Read Entire Article