தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான ஓவிய போட்டி

6 months ago 17

புதுக்கோட்டை, நவ.15: புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டத்துடன் இணைந்து நடத்தும் \”57-வது தேசிய நூலக வார விழா\” 20ம்தேதி வரை நடக்கிறது. முதல் நாள் நிகழ்வாக நேற்று 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி ”அறிவுத் தோட்டம்” என்ற தலைப்பில் நடைபெற்றது. நடுவர்களாக ஓவியர் சித்ரகலா ரவி, கவிஞர் புதுகை புதல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். 50க்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டு தங்களின் ஓவியத்திறனை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் அலுவலக கண்காணிப்பாளர், மைய நூலக பணியாளர்கள், காமராஜபுரம், புதுக்கோட்டைதெற்கு கிளை நூலகப் பணியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வினை மாவட்ட நூலகர் சிவக்குமார், முதன்மை நூலகர் சசிகலா, வாசகர் வட்டத்தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர். இதில் ஏராளா மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான ஓவிய போட்டி appeared first on Dinakaran.

Read Entire Article