மயிலாடுதுறை: இந்தியாவின் நெருக்கடி நிலை காலத்தின் அத்துமீறல், அரசியல் சட்டத்துக்கு எதிரான நிலையை விளக்கும் வகையிலான விழிப்புணர்வு மற்றும் சிறைக்கு சென்ற போராளிகளுக்கு பாராட்டு கூட்டம் பாஜக சார்பில் மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்தியாவில் போதைப் பொருள் அதிகமாக உபயோகிக்கும் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. போதைப் பொருளுக்காக செயல்படக்கூடியவர்கள் சென்ட்ரல் ஸ்கூல், சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவர்களை குறிவைக்கின்றனர்.