தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைத்தால் நாடு பிளவுபடும் அபாயம்: செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

17 hours ago 2

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கப்பட்டால், வடக்கு, தெற்கு என்றும் இந்தி பேசும் மாநிலங்கள், இந்தி பேசாத மாநிலங்கள் என்றும் பிளவு ஏற்பட்டு தேசிய ஒருமைப்பாடு சீர்குலையும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை குறித்து சமீபத்தில் கோவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொகுதி மறுவரையறை செய்வதால் தமிழகத்தின் எண்ணிக்கை குறையாது எனக் கூறினார். ஆனால், எந்தெந்த மாநிலங்களுக்கு தொகுதி கூடுகிறது என்பதைப் பற்றி தெளிவாக கூறவில்லை. இதன்மூலம், பாஜக, தொகுதி மறுவரையறை பிரச்சினையில் வெளிப்படைத்தன்மையோடு நடந்து கொள்ளவில்லை. இதனால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அதன் காரணமாகதான், தமிழக முதல்வர் 58 கட்சிகள் அடங்கிய அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். அதில், தொகுதி மறுவரையறையை இன்னும் 30 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Read Entire Article