தென்பெண்ணையாறு நீர் பிரச்சனை; தமிழ்நாட்டுடன் பேச்சு: டி.கே.சிவகுமார்

4 months ago 12

பெங்களூரு: தென்பெண்ணையாறு நீர் பிரச்சனை குறித்து தமிழ்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண முயற்சி மேற்கொள்ளப்படும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய ஆற்றின் குறுக்கே அணை கட்ட தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருமாநிலங்களையும் அழைத்து அணை கட்டுவது குறித்து பேசுவதாக ஒன்றிய அமைச்சர் சோமண்ணா கூறியுள்ளார். தென்பெண்ணையாறு பிரச்சனைக்கு நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டால் காலதாமதமாகும் என்றும் கூறினார்.

The post தென்பெண்ணையாறு நீர் பிரச்சனை; தமிழ்நாட்டுடன் பேச்சு: டி.கே.சிவகுமார் appeared first on Dinakaran.

Read Entire Article