மதுரை, ஜூன் 23: தென்னை மரங்களில் சிவப்பு கூன் வண்டு தாக்குதல் காணப்பட்டால், அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தென்னை மரங்களில் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பச்சை மட்டைகளை வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும், அவசியம் ஏற்பட்டால் தண்டுப்பகுதியிலிருந்து 120 செ.மீ தள்ளியுள்ள மட்டைகளை மட்டும் வெட்ட வேண்டும். வண்டு தாக்கி விழுந்த மரங்களை வெட்டி தீயிட்டு எரிக்க வேண்டும். மோனோகுரோட் டோபாஸ் மருந்து 10 மில்லி மற்றும் தண்ணீர் 10 மில்லி கலந்து 45 நாட்கள் இடைவௌியில் மூன்று முறை வேர் மூலம் செலுத்த வேண்டும்.
சிவப்பு கூன்வண்டு கவர்ச்சி பொறியில் உணவு கவர்ச்சிப் பொருட்களான கரும்பு கோழை (மொலாசஸ்),
நீரா இரண்டரை லிட்டர், அன்னாசி பழக்கூழ், பனம்பழக்கூழ், வாழைப்பழம் கூழ் ஆகியவற்றிலி் ஏதேனும் ஒன்றில் ஒன்றரை லிட்டருடன் ஈஸ்ட் மாத்திரை 5 கிராம் மற்றும் 5 மில்லி அசிட்டிக் அமிலம் சேர்க்க வேண்டும். இந்த கவர்ச்சி பொறிகளை ஹெக்டேருக்கு ஒன்று வீதம் வைத்து ஆண் மற்றும் பெண் சிவப்பு கூன் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
The post தென்னையில் சிவப்பு கூன்வண்டு தாக்குல் தடுக்கும் வழிமுறைகள் அறிவிப்பு appeared first on Dinakaran.