தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு நடத்தலாம்: தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவு

1 month ago 14

மதுரை: தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை குடமுழுக்கு நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, குடமுழுக்கு நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அரசு தரப்பில் தடையை நீக்க கோரி நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.மதி ஆகியோர் முன் நேற்று முறையீடு செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘வீடியோ காலில் அனைத்தையும் பார்த்தோம். தடை விதிக்கும் அளவுக்கு பாதிப்பு இல்லை. சில பணிகளில் தொய்வு உள்ளது. சில பணிகள் நிறைவு பெற்று விட்டது. எனவே, இடைக்கால தடை நீக்கப்படுகிறது. குடமுழுக்கு விழாவிற்கான பணிகளை மேற்கொள்ளலாம். மேலும் சென்னை ஐஐடி குழு மற்றும் வழக்கறிஞர் கமிஷனர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

 

The post தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு நடத்தலாம்: தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article