சென்னை: தென்தமிழகத்தில் இருந்து வரும் பேருந்துகள் இனி கிளாம்பக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு அனைத்து பேருந்துகளும் மாற்றி இயக்கப்பட்ட நிலையில், சில போக்குவரத்துக் கழக பேருந்துகள் மட்டும் தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்தது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தபோதும், தாம்பரம் வரை பேருந்துகள் இயக்கப்படுவதால் நெரிசலை கட்டுப்படுத்துவது சவாலாக இருந்து வந்தது.