தூத்துக்குடியில் வாலிபரை கட்டையால் தாக்கிய அண்ணன், தம்பி கைது

3 hours ago 2

தூத்துக்குடி, மேலசண்முகபுரம், வண்ணார் 2வது தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் கார்த்திக்குமார் (வயது 25). இவர் ஒரு பெண்ணிடம் பேசியதை வண்ணார் 3வது தெருவை சேர்ந்த சங்கர் மகன்கள் செல்வகுமார்(27), சேர்மகுமார்(25) ஆகிய 2 பேரும் கண்டித்துள்ளனர். இதனால் இவர்கள் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று அண்ணன்- தம்பி 2 பேரும் சேர்ந்து கார்த்திக்குமாரை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் வழக்குப்பதிவு செய்து, செல்வகுமார் மற்றும் சேர்மகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை செய்தார்.

Read Entire Article