தூத்துக்குடி,டிச.2: தூத்துக்குடி முனியசாமிபுரத்தை சேர்ந்தவர் பைரவன். இவரது மனைவி செல்வராணி (26). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களது பக்கத்து வீட்டில் பொன்ராஜ் என்ற ராசு (24) என்பவர் குடியிருந்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து செல்வராணி தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் பொன்ராஜை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளிய வந்த பொன்ராஜ், அண்ணாநகரில் வசித்து வந்தார்.
இந்நிலையில் அவர் தனது நண்பரான டிஎம்பி காலனியை சேர்ந்த கூல்பாண்டி மகன் யோகேஷ் குமார் (24), என்பவருடன் நேற்று முன் தினம் செல்வராணி வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். மேலும் அவர்கள் இருவரும் செல்வராணியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் தென்பாகம் சப் இன்ஸ்பெக்டர் முத்தமிழரசன் வழக்குப் பதிந்து பொன்ராஜ் மற்றும் அவரது நண்பர் யோகேஷ் குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post தூத்துக்குடியில் பெண்ணை கத்தியால் குத்திய 2பேர் கைது appeared first on Dinakaran.