தூத்துக்குடியில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு

2 months ago 13

தூத்துக்குடி,டிச.19: தூத்துக்குடியில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஜார்ஜ்ரோட்டை சேர்ந்தவர் சார்லஸ்(21). கடல் தொழில் செய்து வருகிறார். இவர் தூத்துக்குடியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். மேலும் பெற்றோர் சம்மதிக்காததால் அந்த சிறுமியை கடத்தி வந்து திருமணம் செய்துள்ளார். இதன் காரணமாக அந்த சிறுமி தற்போது கர்ப்பிணியாகவுள்ளார். இது குறித்து சமூகநலத்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சார்லஸ் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தூத்துக்குடியில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article