சென்னை: தமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை சீசனுக்கு பிறகு பெரியளவில் மழை இல்லாமல் இருந்தது. ஆனால், பொங்கல் முடிந்த பிறகு கடந்த சில நாட்களாக ஓரளவுக்கு மழை பெய்தது. கடந்த 24 மணி மணி நேரத்தைப் பொறுத்தவரைத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 33.9° செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாகக் கரூர் பரமத்தியில் 16.0° செல்சியஸ் வெப்பமும் நிலவுகிறது.
இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென்தமிழகத்தில் இன்று (22-01-2025) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பிற்பகல் 1 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.