துப்பாக்கியைக் காட்டி மனைவியை மிரட்டிய அ.தி.மு.க பிரமுகர் கைது

2 months ago 12
திருவாரூரில் மனைவியிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். பாலாஜி என்ற அந்த நபரின் தந்தை, தனது பேத்தியிடமே தவறாக நடந்து கொள்ள முயன்றதாக பாலாஜியின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை வாபஸ் பெறக்கோரி, நாட்டுத் துப்பாக்கி ஒன்றை வைத்து பாலாஜி தனது மனைவி மீனாட்சியை மிரட்டியுள்ளார். அந்தத் துப்பாக்கியைக் கைப்பற்றிய மீனாட்சி, போலீசில் ஒப்படைத்து, புகாரும் அளித்துள்ளார். இதனையடுத்து பாலாஜியைக் கைது செய்த போலீசார், அவருக்குத் துப்பாக்கி கொடுத்த அவரது நண்பர் விஜயபாஸ்கர் என்பவரையும் கைது செய்து, துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். 
Read Entire Article