தேனி: உசிலம்பட்டி அருகே காவலரைக் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை கேரள எல்லையில் தனிப்படை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநரான தலைமைக் காவலர் முத்துக்குமார்(36), கடந்த 27-ம் தேதி நாவார்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தச் சென்றபோது, அங்கிருந்த சிலருடன் தகராறு ஏற்பட்டது. இதில் முத்துக்குமார் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.