துணை முதல்வர் உதயநிதியின் தனிச் செயலராக பிரதீப் யாதவ் நியமனம்

6 months ago 39

சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் தனிச் செயலராக, ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கால்நடை, பால், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.கோபால், உயர் கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். உயர் கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலர் பிரதீப் யாதவ், துணை முதல்வரின் தனிச் செயலராக நியமிக்கப்படுகிறார்.

Read Entire Article