துணை முதல்வர் உதயநிதி டி-ஷர்ட் விவகாரம்: விளக்கம் அளிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

3 months ago 14

சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்வுகளில் பங்கேற்கும்போது கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிய எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை அரசியலமைப்பு சட்டரீதியாக பதவி வகிப்பவர்களுக்கும் பொருந்துமா என்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை சேலையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் எம். சத்யகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘அனைத்து அரசு ஊழியர்களும் முறையான, கலாச்சார, பாரம்பரிய ரீதியாக ஆடை அணிந்து வர கட்டுப்பாடுகளை விதித்து கடந்த 2019-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனால், தமிழக துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்வுகளில் பங்கேற்கும்போது கட்சியின் உதயசூரியன் சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து பங்கேற்பது என்பது ஏற்புடையதல்ல. அரசாணையை மீறுவதாகும்.

Read Entire Article