தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 32 இடங்களில் என்ஐஏ ரெய்டு: ஜம்மு-காஷ்மீரில் அதிரடி

1 day ago 5

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் அதிரடி நடவடிக்கையாக தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 32 இடங்களில் என்ஐஏ ரெய்டு நடத்தி வருகிறது. ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாத அமைப்புகளின் ஓவர் கிரவுண்டு தொழிலாளர்கள் எனப்படும் ஆதரவாளர்கள் மற்றும் அவர்களின் புதிய கிளைகளுடன் தொடர்புடையவர்களை குறிவைத்து, தேசிய புலனாய்வு முகமை கடந்த காலங்களில் பல இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளது.

கடந்த 2022 ஜூன் முதல், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் அவற்றின் புதிய கிளைகளான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்புடையவர்களின் இடங்களில் தேசிய புலனாய்வு முகமை தொடர்ந்து சோதனைகளை நடத்தி, ஆயுதங்கள், வெடிகுண்டுகள், பணம் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை பறிமுதல் செய்தது.

உதாரணமாக, 2024 ஏப்ரலில் நகரில் 9 இடங்களிலும், 2024 நவம்பரில் ரியாசி, டோடா, உதம்பூர் போன்ற இடங்களிலும் சோதனைகள் நடந்தன. இந்நிலையில் இன்று ஜம்மு-காஷ்மீரில் 32 இடங்களில், அதாவது ஷோபியான், குல்காம், நகர் மற்றும் கதுவாவில், பஹல்காம் தாக்குதல் உள்ளிட்ட தீவிரவாத செயல்களுடன் தொடர்புடைய பெரிய நெட்வொர்க்கை குறிவைத்து சோதனைகளை நடத்தி வருகிறது. இதில் காவல்துறை மற்றும் சிஆர்பிஎப் உதவியுடன் முக்கிய ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

The post தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 32 இடங்களில் என்ஐஏ ரெய்டு: ஜம்மு-காஷ்மீரில் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article