தீவிரவாதம், பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருப்பதால் 4 மாநிலங்களில் நாளை போர் ஒத்திகை பயிற்சி: மாதந்தோறும் நடத்த முடிவு

1 day ago 5

டெல்லி: தீவிரவாத, பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருப்பதால் 4 மாநிலங்களில் நாளை போர் ஒத்திகை பயிற்சி நடைபெறும் நிலையில், இந்த ஒத்திகையை இனிமேல் மாதந்தோறும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து எந்த நேரத்திலும் தீவிரவாத அச்சுறுத்தல் அல்லது ராணுவ நடவடிக்கைகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதனால் பாகிஸ்தானின் எல்லையோர மாநிலங்களில் போர் பயிற்சி ஒத்திகை நடத்த இந்த வாரத்தின் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் நாளை (மே 31) ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி நாளை மாலை பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய நான்கு மாநிலங்களில், சர்வதேச எல்லையை ஒட்டிய மாவட்டங்களில் போர் பயிற்சி ஒத்திகை நடைமுறை (மாக் ட்ரில்) நடத்தப்படவுள்ளது. இந்தப் பயிற்சியின் நோக்கம், போர் போன்ற சூழ்நிலைகளில் பொதுமக்களின் தயார்நிலையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது. ஒன்றிய அரசின் உத்தரவுபடி, இந்தப் பயிற்சி இனி மாதந்தோறும் இப்பகுதிகளில் நடத்தப்படும் என்றும், இதன் மூலம் கட்டுப்பாட்டு அறைகளின் தயார்நிலை இருக்கவும், வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை அமைப்புகளின் செயல்பாடு,

தீயணைப்பு சேவைகள், மீட்பு நடவடிக்கைகள், கிடங்கு மேலாண்மை, வெளியேற்ற திட்டங்கள் மற்றும் காவலர் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு திறனை சோதிக்க முடியும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

The post தீவிரவாதம், பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருப்பதால் 4 மாநிலங்களில் நாளை போர் ஒத்திகை பயிற்சி: மாதந்தோறும் நடத்த முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article