தீயணைப்பு தடையில்லா சான்று அரசாணைக்கு தடை கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

4 months ago 11

கட்டிட அனுமதிக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று வழங்க வகை செய்யும் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு 4 வார காலத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுக்குமாடிக் கட்டிடங்கள், கல்வி மற்றும் வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்களுக்கு ஒப்புதல் பெறும் முன்பாக தீயணைப்புத் துறையிடமிருந்தும் தடையில்லா சான்று பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு கடந்த நவ.21 அன்று பிறப்பித்த அரசாணையில் கட்டிட அனுமதிக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று பெறும் வகையில் நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தீயணைப்புத் துறை அதிகாரியான எம்.சுப்பிரமணியன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Read Entire Article