தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அரசு அலுவலகம், பள்ளி, கல்லூரி இன்று வழக்கம் போல் செயல்படும்

6 months ago 17

சென்னை: தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் தமிழ்நாட்டில் இன்று அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை கடந்த மாதம் 31ம் தேதி கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்று, தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 1ம் தேதியை(வெள்ளிக்கிழமை) பொது விடுமுறை தினமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனால், தீபாவளி பண்டிகைக்கு வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என்று தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதனால் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் உற்சாகமாக கொண்டாடி விட்டு திரும்பினர்.

நவம்பர் 1ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நவம்பர் 9ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாள் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் இன்று(சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்கள் இன்று வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அரசு அலுவலகம், பள்ளி, கல்லூரி இன்று வழக்கம் போல் செயல்படும் appeared first on Dinakaran.

Read Entire Article