தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

7 months ago 24

சென்னை: தீபாவளிக்கு ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

பணி, கல்வி நிமித்தமாக வெளியூர்களில் தங்கியிருப்போர் பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தீபாவளிக்கு முந்தைய 3 நாட்களில் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தமாக 10,784 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன்மூலம் 5.76 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணமாகினர்.

Read Entire Article