தீபாவளி இலவச அரிசி குறித்த கேள்வியால் ஆவேசமடைந்த புதுச்சேரி முதல்வர்

2 months ago 12

புதுச்சேரி: தீபாவளிக்கு இலவச அரிசி, சர்க்கரை ரேஷனில் அனைத்து தொகுதிகளிலும் முழுமையாக விநியோகம் நடக்காதது பற்றி கேள்ளி கேட்டதற்கு "நகருங்க" என முதல்வர் ரங்கசாமி கோபத்துடன் குறிப்பிட்டு புறப்பட்டார்.

புதுச்சேரியில் தீபாவளிக்கு இலவச அரிசி, சர்க்கரை ரேஷனில் தரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். ஆனால் பல இடங்களில் ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. பல தொகுதிகளிலும் விநியோகிக்கப்படவில்லை. அதேபோல் ஆயிரம் ரூபாய் மளிகைப் பொருட்கள் ரூ.500-க்கு தரப்படும் என அறிவித்தும் செயல்படுத்தவில்லை. இந்நிலையில் இன்று (நவ.4) வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் மீன் பிடி துறைமுக கட்டுமான விரிவாக்கப்பப் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இதில் கலந்துகொண்டு முதல்வர் ரங்கசாமி பூமி பூஜையை தொடங்கிவைத்தார்.

Read Entire Article