திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு - 4 மாணவிகள் மயக்கம்

6 months ago 21

சென்னை: கடந்த வாரம் வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படும் திருவொற்றியூர் தனியார் பள்ளியில் நேற்று 4 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். இதனால், அப்பள்ளியை ஏராளமான பெற்றோர் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த அக்.25-ம் தேதி வாயு கசிவு ஏற்பட்டு 39 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். சிலருக்கு மூச்சுத் திணறலும் வாந்தியும் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அருகில் இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை முடிந்து மாலை வீடு திரும்பினர். பள்ளிக்கும் தொடர் விடுமுறை விடப்பட்டது.

Read Entire Article