*வருவாய்துறை விசாரணை
திருவையாறு : திருவையாறு அருகே உள்ள கோனேரிராஜபுரம் மேலத்தெருவில் நாய் கடித்து 7 ஆடுகள் இறந்தது குறித்து வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருவையாறு அடுத்த கோனேரிராஜபுரம் மேலத்தெருவை சேர்ந்த மதிவாணன் மனைவி ஜெயந்தி(41), இவர் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று கூலி வேலைக்கு சென்றிருந்தார்.
ஆட்டு கொட்டகையில் அவர் வளர்த்துவந்த ஆடுகள் கட்டியிருந்தன. இவர் வேலையை முடித்துவிட்டு மாலை வீட்டுக்கு வந்து ஆட்டு கொட்டகையில் கட்டியிருந்த 7 ஆடுகளை பார்த்தபோது கழுத்து, காதுகள் கடிபட்டும், குடல் வெளியே வந்த நிலையில் இறந்து கிடந்தன. இந்த ஆடுகளை வெறிநாய் கடித்து இறந்ததாக கூறப்படுகிறது. இது சம்மந்தமாக வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருவையாறு அருகே வெறிநாய் கடித்து 7 ஆடுகள் சாவு appeared first on Dinakaran.