திருவாரூர் மாவட்ட குறைதீர் கூட்டத்தில் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.25 லட்சத்தில் நலதிட்ட உதவி: கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார்

3 hours ago 3

திருவாரூர், மே 20: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் 247 மனுக்கள் பெறப்பட்டன. திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நேற்று கலெக்டர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 247 மனுக்களை அளித்தனர். பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மோகனசந்திரன் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். மேலும் தரைதளத்தில் மாற்றுதிறனாளிகளிடம் அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டார்.

அதனைதொடர்ந்து, மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின்கீழ் பயலும் 10 மாணவர்களுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலி, 5 பேர்களுக்கு ரூ 5 ஆயிரத்து 500 மதிப்பிலான நடை உபகரணம், 6 பேர்களுக்கு ரூ 45 ஆயிரம் மதிப்பில் காதொலிக்கருவி என மொத்தம் 21 நபர்களுக்கு ரூ ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார்.
கூட்டத்தில் கலெக்டரின் பொது நேர்முக உதவியாளர் ராஜா, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் தையல்நாயகி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திருவாரூர் மாவட்ட குறைதீர் கூட்டத்தில் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.25 லட்சத்தில் நலதிட்ட உதவி: கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article