திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதயம் மற்றும் மூளை நரம்பியல் பிரிவுகளில் தலா ஒரு மருத்துவர் மட்டுமே பணியாற்றுவதால், நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முன்னாள் முதல்வர் கருணாநிதி 2010-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதி தொடங்கிவைத்தார். 500 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் தற்போது, 850 படுக்கை வசதிகள் உள்ளன. இதில், திருவாரூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.