திருவாடானை,பிப்.18: திருவாடானை அருகே ஊமைஉடையான்மடை பகுதியைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி மகன் ஜான்பிரிட்டோ(34). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அரசத்தூர் ஊராட்சியில், ஊராட்சி செயலராக பணிபுரிந்து வரும் அருளானந்துக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஊராட்சி செயலர் அருளானந்து தூண்டுதலின் பேரில், அவரது சகோதரர் ஜான்பால், ஜான்பால் மனைவி வேதமரியாள் மற்றும் ராயர் ஆகியோர் சேர்ந்து தன்னை தாக்க முயன்றனர்.
அப்போது தடுக்க வந்த எனது தாயார் மோட்சராணியை அடித்து தாக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக ஜான்பிரிட்டோ திருவாடானை போலீசில் புகார் அளித்தார். போலீசார், ஊராட்சி செயலரான அருளானந்து(39), அவரது சகோதரர் ஜான்பால்(37), ஜான்பால் மனைவி வேதமரியாள்(35) மற்றும் ராயர்(68) மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
The post திருவாடானை அருகே மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.