
திருவள்ளூர்,
திருவள்ளூர் துணைமின் நிலையத்தில் உள்ள மின் சாதனங்களில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் திருவள்ளூர் நகரத்தில் உள்ள ஜே.என்.சாலை (ரெயில் நிலையம் முதல் எல்.ஐ.சி. வரை), பூங்காநகர், ஐ.ஆர்.என்.பின்புறம், புங்கத்தூர், போளிவாக்கம், மணவாளநகர், பட்டரை, சேலை, ஏகாட்டூர், அதிகத்தூர், வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், கீழ்நல்லாத்தூர், நுங்கம்பாக்கம், ராஜாஜிபுரம், பெரியகுப்பம், மணவாளநகர், ஒண்டிக்குப்பம், ராமஞ்சேரி, பாண்டூர், பட்டரைப்பெருமந்தூர் மற்றும் ராமஞ்சேரி துணை மின் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கும், கடம்பத்துார், பிரயாங்குப்பம், புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர்.நகர், ஸ்ரீதேவிகுப்பம், செஞ்சி, பானம்பாக்கம், மணவூர், விடையூர், ஆட்டுப்பாக்கம், பெரிய களக்காட்டூர், சின்ன களக்காட்டூர், சின்னம்மாபேட்டை அகரம், வெண்மனம்புதுார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்சார நிறுத்தம் மின்சார வினியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.