திருமயம், பிப்.6: திருமயம் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் அடைவு தேர்வு மையத்தை ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 93 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 3ம், 4 ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான அடைவுத் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருமயம் அருகே உள்ள சேதுராப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மாநில அடைவு தேர்வு மையத்தை வட்டார கல்வி அலுவலர் ஜேம்ஸ் ஆரோக்கியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்குறுப்பன் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
The post திருமயம் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் அடைவு தேர்வு மையத்தில் ஆய்வு appeared first on Dinakaran.