திருமண நிகழ்ச்சியில் சப்பாத்தி பரிமாறுவதில் தகராறு; 2 பேர் அடித்துக்கொலை

1 month ago 6

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டம் சராய் ஹிர்டே ஷா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 3ம் தேதி இரவு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சியில் விருந்து பரிமாறப்பட்டது. அப்போது, மணமகள் உறவினர்களான ரவி (வயது 18), ஆஷிஷ் (வயது 17) மற்றும் மணமகன் உறவினர்கள் இடையே சப்பாத்தி பரிமாறுவதில் தகராறு ஏற்பட்டது. தகராறு அடிதடியானது. மணமகன் தரப்பினர் ரவி, ஆஷிசை சரமாரியாக தாக்கினர். இதில், படுகாயமடைந்த இருவரும் மயங்கி விழுந்ததனர். உடனடியாக, இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article