சென்னை: திருப்பூர் ஊத்துக்குளி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 2 மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஊத்துக்குளி அருகே செங்காளிபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பேருந்து விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் பெரியசாமி, ஹரிகிருஷ்ணன் குடும்பத்துக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு கிச்சை அளிக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
The post திருப்பூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 2 மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!! appeared first on Dinakaran.