திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மிகப் பெரிய போராட்டம்: இந்து முன்னணி எச்சரிக்கை

4 months ago 10

சென்னை: ‘திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை எனக் கூறி மதக் கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் இஸ்லாமிய அமைப்புகளை எதிர்த்து, இந்து முன்னணி சார்பில் மக்களைத் திரட்டி மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்’ என்று அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றாகும். இந்தத் திருத்தலம் இருக்கும் மலையானது அகநானூற்றில் முருகன் குன்றம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, மதுரைக் காஞ்சி, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் இதன் சிறப்பைப் பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

Read Entire Article