மதுரை : தைப்பூச விழா நெருங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் இருந்து முருக பக்தர்கள் திருப்பரங்குன்றம் வருவதை தடுக்கும் வகையில் மலை குறித்து சில சமூக விரோத அமைப்புகள் பதற்றத்தை உருவாக்கி வருகின்றன. இதை தடுக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக தென் தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் லெட்சுமன நாராயணன், மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவின் விவரம்: “தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை விரும்பாத சிலர், திருப்பரங்குன்றம் மலையை வைத்து மத மோதல்களை உருவாக்கும் வகையில் விரும்பத்தகாத செயல்களை செய்து வருகின்றனர்.