திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: எல்.முருகன்

4 months ago 14

மதுரை : “திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உடனடியாக இந்து அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அமைச்சர் எல் முருகன் திங்கள்கிழமை காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்து மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகளுடன் சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

Read Entire Article