டெல்லி: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி பாரத் இந்து முன்னணி அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் தக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி பாரத் இந்து முன்னணி அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்கா இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஏற்கனவே மதுரையில் இந்து முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கூட நீதிமன்ற நிபந்தனைகள் மீறப்பட்டதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் எந்த போராட்டத்துக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என உத்தரவிட்டனர். இதனை அடுத்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று நீதிபதிகள் பேலா எம் திரிவேதி, பி பி வாரலே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதே என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
The post திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.