
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இன்று விடுமுறை தினமாக இருப்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று காலை முதலே திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.
இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குவிந்த பக்தர்கள் இலவச தரிசனத்தில் 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் சுமார் 20 மணிநேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதே போல் ரூ.300 டோக்கன் பெற்றவர்கள் 5 மணிநேரமும், சர்வ தரிசனம் டோக்கன் பெற்றவர்கள் 6 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர். அங்குள்ள 31 காத்திருப்பு அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.