திருப்பதி லட்டு விவகாரம்: மத்திய உணவு பாதுகாப்புத் துறைக்கு ஐகோர்ட் மதுரைக் கிளை சரமாரி கேள்வி

8 months ago 44

மதுரை: திருப்பதி லட்டு விவகாரத்தில் திண்டுக்கல் நிறுவனத்துக்கு உரிய தகவல்கள் இல்லாமல் நோட்டீஸ் அனுப்பியது ஏன் என மத்திய உணவுப் பாதுகாப்புத் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஜூன் மாதம் முதல் எங்கள் நிறுவனம் நெய் விநியோகம் செய்து வந்தது. அந்த நெய்யில் (மாட்டுக் கொழுப்பு) கலப்படம் இருப்பதாக குஜராத்தை சேர்ந்த நிறுவனம் அறிக்கை அளித்தது. இதையடுத்து எங்கள் நிறுவனத்திடம் நெய் கொள்முதல் செய்ய தடை விதித்து, எங்கள் நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தானம் கருப்புப் பட்டியலில் சேர்த்தது.

Read Entire Article