
நெல்லை மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு அடிதடி வழக்கில் ஈடுபட்ட வள்ளியூர், சங்கனாபுரம், பொட்டல் புதூர் தெருவை சேர்ந்த சின்னத்துரை (வயது 29) கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 3 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து சின்னத்துரையை சுத்தமல்லி காவல் துறையினர் தேடி வந்த நிலையில் நேற்று (24.5.2025) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.