திருத்தணி அருகே சஸ்பென்ட் செய்யப்பட்ட கிராம உதவியாளர் தற்கொலை

2 months ago 6

திருத்தணி: திருத்தணி அருகே சஸ்பென்ட் செய்யப்பட்ட கிராம உதவியாளர் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவலாங்காடு ஒன்றியம் பொன்பாடி பள்ளர் காலனியைச் சேர்ந்தவர் தண்டுகான் என்பவரது மகன் ரஜினிகுமார் (39). இவர் வருவாய்த் துறையில் பொன்பாடி கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பயிருக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.

கிராம உதவியாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இறந்த ரஜினிகுமாருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post திருத்தணி அருகே சஸ்பென்ட் செய்யப்பட்ட கிராம உதவியாளர் தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article